ரயில்களில் எவ்வித ஆவணமும் இன்றி ஓசியில் பயணிக்கும் மாநில போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே நிர்வாகம் அந்தந்த மண்டல ரயில்வே வணிக மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய ரயில்வே பயணிகள் ரயில்களில் நூற்றுக்கு 10 சதவீதம் பேர் பயண சீட்டின்றி பயணித்து வருகின்றனர். அதேநேரத்தில் ரயில்களில் ராணுவம், காவல்துறை, துணை ராணுவப்படையினர், ரயில்வே பாதுகாப்புப்படையினர் ஆகியோருக்கு தொழில்ரீதியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மாநில போலீசார் அவ்வபோது குற்றவாளிகளை பிடித்து வருதல், கோர்ட் பணி உள்ளிட்ட பணிகளுக்காக ரயில்களில் பயணிக்க உயர்அதிகாரிகளால் அனுதிச்சீட்டு வழங்கப்படுகிறது. அந்த அனுமதி சீட்டில் சம்பந்தப்பட்ட காவலரின் அனைத்து விவரங்களுடன், பயணிப்பதற்கான காரணமும் கூறப்பட்டிருக்கும். இந்நிலையில், இச்சலுகையை போலீசார் சிலர் தவறாக பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து ரயில்வே நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்கள், நிலைய மேலாளர்கள், வணிக மேலாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், 'அந்தந்த மாநில போலீசார் ரயில்களில் பயணிக்கும் போது உரிய சீருடையுடன் அடையாள அட்டை, பணி அனுமதி ச
‘ சூரியன், நிலவு, பூமி என மூன்றும் நேர் கோட்டில் இருக்கும் போது சூரிய வெளிச்சத்தை நிலவு மறைக்கிறது. பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைக்கும் காட்சி தென்படும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைத்தால் அதுதான் முழு சூரிய கிரகணம். அவ்வகையில் இந்த ஆண்டின் கடைசி கிரகணமாக, டிசம்பர் 26ஆம் தேதியன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு தோன்றுகிறது. இதுபற்றி முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறுகையில், 'டிசம்பர் 26ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8 மணியில் இருந்து 3 மணி நேரம் சூரிய கிரகரணம் தெரியும். கோவை தெளிவாகவும் சென்னையில் பகுதி அளவிலும் கிரகணம் தெரியும். அவினாசி, ஈரோடு, கரூர், சிவகங்கை உள்ளிட்ட10 இடங்களில் தெளிவான சூரிய கிரகணம் தெரியும். சூரிய கிரகணத்தை எப்போதும் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. கிரகணத்தின்போது உணவு உட்கொள்ளலாம், உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாது' என்றார். சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக, மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்துவருகிறது.