ரயில்களில் எவ்வித ஆவணமும் இன்றி ஓசியில் பயணிக்கும் மாநில போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே நிர்வாகம் அந்தந்த மண்டல ரயில்வே வணிக மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய ரயில்வே பயணிகள் ரயில்களில் நூற்றுக்கு 10 சதவீதம் பேர் பயண சீட்டின்றி பயணித்து வருகின்றனர். அதேநேரத்தில் ரயில்களில் ராணுவம், காவல்துறை, துணை ராணுவப்படையினர், ரயில்வே பாதுகாப்புப்படையினர் ஆகியோருக்கு தொழில்ரீதியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மாநில போலீசார் அவ்வபோது குற்றவாளிகளை பிடித்து வருதல், கோர்ட் பணி உள்ளிட்ட பணிகளுக்காக ரயில்களில் பயணிக்க உயர்அதிகாரிகளால் அனுதிச்சீட்டு வழங்கப்படுகிறது. அந்த அனுமதி சீட்டில் சம்பந்தப்பட்ட காவலரின் அனைத்து விவரங்களுடன், பயணிப்பதற்கான காரணமும் கூறப்பட்டிருக்கும். இந்நிலையில், இச்சலுகையை போலீசார் சிலர் தவறாக பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து ரயில்வே நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்கள், நிலைய மேலாளர்கள், வணிக மேலாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், 'அந்தந்த மாநில போலீசார் ரயில்களில் பயணிக்கும் போது உரிய சீருடையுடன் அடையாள அட்டை, பணி அனுமதி ச
sattapadikuttram@gmail.com