பெருந்துறை சிப்காட்டில் நிலம்,நீர்,காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூடக்கோரி பெருந்துறை மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு 2018 ஜூன் 26-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. பெருந்துறை சிப்காட் சுற்றுவட்டார கிராம மக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சூழல் ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நேற்று (1-6-2018) மாலை பெருந்துறை செந்தூர் மஹாலில் திரு.வி.எம்.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டுவரும் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், தீர்வுக்கு மேற்கொள்ள வேண்டிய தொடர்நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிறைவாக, பின்வரும் தீர்மானங்கள் வருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் 2700 ஏக்கர் பரப்பில் சிப்காட் (SIPCOT) அமைக்கப்பட்டு கடந்த சுமார்25 ஆண்டுகளாக செய்ல்பட்டு வருகிறது. இங்கு துணி,நூல் பதனிடுதல், சாயமிடுதல், தோல் பதனிடுதல், ரசாயனம், ஸ்டீல்,டயர்,ரப்பர