தாம்பரம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினுள், கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் இன்று, திறக்கப்பட்டது. இதை, உயர்நீதிமன்ற நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணா, திறந்து வைத்தார். இதில், சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதி, பவானி சுப்பராயன்,போலீஸ் கமிஷனர், ஏ.கே.,விஸ்வநாதன், சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம், கலந்து கொண்டனர். கூடுதல் குற்றவியல் நீதிமன்ற, நீதிபதியாக கே.சுஜாதா பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment