Skip to main content

மணல் கடத்தல் கும்பலிடம் ஏமாந்த தாசில்தார்..


வேலூர் மாவட்டம் நாட்றம் பள்ளி அருகே உள்ள கிராமங்களில் மணல் கொள்ளை தடையின்றி நடப்பதால் ஓடைகள், பள்ளத்தாக்குகளாக உறுமாறி போய் உள்ளது. தாசில்தார் துணையுடன் நடக்கின்ற மணல் கொள்ளையின் பின்னணிவேலூர் மாவட்டம் நாட்றம் பள்ளி சுற்றுவட்டார கிராமங்களான வெலக்கல் நத்தம், செட்டேரி டேம்,சின்ன மோட்டூர், ஆத்தூர்குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்கு சொந்தமான ஓடைகளில் வண்டல் மண், வீடுகட்ட பயன்படும் மணல் கொள்ளை ஜோராக நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஓடைகள் முழுமையாக தோண்டப்பட்டு பெரும் பள்ளத்தாக்குகளாக காட்சி அளிக்கின்றது.பச்சூர், கொத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வளம் மிக்க செம்மண் கிடைப்பதால், அங்குள்ள மண்ணை திருடி செங்கல் சூளைகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்த வண்டல் மண் மற்றும் மணல் கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருக்க நாட்றம்பள்ளி தாசில்தார் பிரபு கணேஷ் என்பவர் லட்ச கணக்கில் லஞ்சம் பெற்று வருவதாகவும் , மணல் கொள்ளையர்களிடம் இருந்து தாசில்தாரின் கார் ஓட்டுனர் குமார் என்பவர் லஞ்ச பணத்தை வசூல் செய்து கொடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.இந்த நிலையில் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவரிடம் இருந்து அரசியல் பிரமுகர் மூலம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் தாசில் தார் பிரபு கணேஷ், அதனை சரிபார்க்கும் போது அதில் 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. இதனால் லஞ்சம் கொடுத்தவருடன் ஓட்டுனர் குமார் பேசிய குரல்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுமணல் கடத்தலை தடுத்து நிறுத்துவதோடு, பணம் பெற்றுக் கொண்டு கனிமவள கொள்ளைக்கு துணை போகும் தாசில்தார் பிரபு கணேஷ் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது