பினாமி சொத்து குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: பினாமி சொத்து குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கறுப்பு பணம் ஒழிப்பு மற்றும் வருமான வரி ஏய்ப்பை தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டத்தின் மூலமாக பினாமி சொத்து மற்றும் பரிவர்த்தனை குறித்து தகவல் கூறலாம். தகவல் தெரிவிப்பவர்கள் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பினாமி சொத்து குறித்து தகவல் தரலாம்.
Comments
Post a Comment