நீட் தகுதி தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இனி எத்தனை உயிர்கள் நீட் தேர்வால் பலி ஆகப் போகிறதோ என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் பல கேள்விகள் தவறாக இருந்ததால் மாணவி தற்கொலை செய்துள்ளார் என்றும் தமிழ் மொழி மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தவறான கேள்விகள் கேட்டுள்ளது என்றும் கூறினார். கடந்த ஆண்டு அனிதாவை இழந்தோமம், இந்த ஆண்டு பிரதீபாவை இழந்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.
Comments
Post a Comment