குமரி மாவட்டத்தில் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னைகள் உள்ளன. தேங்காய் மட்டையில் இருந்து தும்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 69 தும்பு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் மூன்று வகையான தும்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழை மற்றும் ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி அடியோடு பாதிப்பு ஆகியுள்ளது. இதனால் ஒரு கதம்பை விவசாய நிலத்தில் இருந்து தும்பு ஆலைக்கு வந்து சேர ரூ.3.25பைசா செலவு ஆகிறது.
தற்போது தேங்காய் மட்டை தட்டுப்பாட்டால் குமரி மாவட்டத்தில் தும்பு உற்பத்தி அடியோடு பாதிப்பு அடைந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது சுமார் 40 டன் தும்பு உற்பத்தி மட்டுமே ஆகிறது என தும்பு ஆலை மாவட்ட தலைவர் குமாரதாஸ் தெரிவித்தார்.
Comments
Post a Comment