Skip to main content

வேலூர் மாவட்ட தேர்தல் பணி தொகுப்பூதியத்தில் ஊழல்...

வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி வருவாய் வட்டாட்சியர்கள் தேர்தல் பணி  செய்யும் BLO , DLO SUPERVISOR  2017-2018 ஆண்டுக்காண மதிப்பூதியம் ஆன்லைனில் வங்கிகளில் மூலம் வழங்காமல் ஆப் லைனில் முறையில் பணம் வழங்கியதில் நாட்றம்பள்ளியில் ஒவ்வொரு BLOவுக்கும் ரூபாய் 7150யில் 150யும் லஞ்சமாக பிடித்தது கொண்டு ரூபாய் 7000 மட்டும் வழங்கியுள்ளார் ஆனால் ரூபாய் 7150க்கு ஒப்புக்கை பெற்றப்பட்டு அனுப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 13 சட்டமன்ற தொகுதியில் திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி சட்ட மன்ற தொகுதியில் மட்டும் தான் ஆன்லைனில் வழங்காமல் ஊழலுள்ள ஆப் லைனில் தேர்தல் மதிப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  திருப்பத்தூரில் 262 BLO நாட்றம்பள்ளி  268 BLO தேர்தல் பணி செய்து வருகின்றனர் என தகவல்.

2017 - 2018 ஆம் ஆண்டுக்காண தேர்தல் மதிப்பூதியம் ஆன்லைனில் வழங்கிய   11 சட்ட மன்ற தொகுதியில் வருவாய் வட்டாட்சியர் கீழ் பணி செய்யும்  தேர்தல் துணை வட்டாட்சியர்களை கடந்த 18-04-2018 பணியிடை மாற்றம் செய்துள்ளது வேலூர் மாவட்ட நிர்வாகம்.

வேலூர் மாவட்ட நிர்வாகம் 2017 - 2018 ஆம் ஆண்டு ஆப்லைனில் தேர்தல் மதிப்பூதியம் வழங்கிய பிரபு கணேஷ் ஊழல் வருவாய் வட்டாட்சியருக்கு சாதகமாக துணை செய்கிறதா? என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை தெரிவிக்கின்றனர்.

கடந்த2016 - 2017 ஆம் ஆண்டு நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் வருவாய் வட்டாட்சியர்கள் தேர்தல் பணி செய்யும் BLO, , DLO , SUPERVISOR  களுக்கு மதிப்பூதியம் ஆன்லைனில் வழங்கியுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குரு காலமானார்

பாமக காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சற்று முன்  உயிரிழந்தார். வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் குரு. வன்னியர் சமூக நலனுக்காக குரல் கொடுத்து வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாகவும் இருந்தார் காடுவெட்டி குரு.