உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் புயல்காற்றில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
மதுரா, ஆக்ரா, எட்டாவா ஆகிய நகரங்களை புரட்டிப் போட்ட சூறாவளிக் காற்று மற்றும் கன மழை காரணமாக இந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானையும் உத்தரப்பிரதேசத்தையும் தொடர்ந்து ஷில்லாங், டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சூறாவளிப் புயல்கள் அச்சுறுத்தி வருகின்றன. பயிர்களும் வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இதுவரை 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலிகார் மற்றும் ஹத்தராஸ் மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒருவாரகாலமாக வடமாநிலங்களை வதைத்த புயல் மழை, அடுத்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment