Skip to main content

லஞ்சம் தராமல் எதுவும் கிடைப்பதில்லை...இ-(இடைத்தரகர்) சேவை மையங்கள்! புரோக்கர்கள்-அதிகாரிகள் பகிரங்க கூட்டணி!



மாவட்டத்திலுள்ள, அனைத்து இ - சேவை மையங்களும், புரோக்கர்களின் கூடாரங்களாக மாறியுள்ளன; லஞ்சம் தராமல், தனி நபர் யாரும், எந்த சான்றிதழையும் வாங்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.கோவை கலெக்டர் அலுவலகம் உட்பட, கோவை மாவட்டம் முழுக்க, மொத்தம் 119 இ - சேவை மையங்கள் உள்ளன. கேபிள் 'டிவி' மற்றும் எல்காட், கூட்டுறவுத்துறை வாயிலாக இவை செயல்படுகின்றன. இந்த மையங்களில், ஜாதி, இருப்பிடம், வாரிசு உள்ளிட்ட, 67 வகையான சான்றிதழ்களை, 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பித்து பெறலாம். இ-சேவை மையத்தில், ஒரு சான்றிதழ் பெற, 60 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது.
ஒரு சான்றிதழை பெற வேண்டுமென்றால், காலை 10:00 மணிக்கு இ-சேவை மையம் திறப்பதற்கு முன்னதாக, சென்று டோக்கன் பெற வேண்டும். முதல், 30 டோக்கன்களுக்கு மட்டுமே ஒரு நாள் முழுக்க சேவை வழங்கப்படும். டோக்கன் இல்லாதவர்கள், இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும், இ - சேவை மைய பணியாளர்கள், 30 டோக்கன்களில், 15 பேருக்கு மட்டும் சான்றிதழ் பெறுவதற்கு, விண்ணப்பிப்பர்.மீதமுள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தை குறிப்பிட்டோ அல்லது வேறு ஆவணங்களை எடுத்துவரச்சொல்லியோ திரும்ப அனுப்பி வைத்துவிடுவர். அவர்களுக்கு பதிலாக, புரோக்கர்கள் கொடுக்கும் சான்றிதழ்களுக்கு, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிப்பர். புரோக்கர்கள் கொடுக்கும் விண்ணப்பங்களுக்கே முன்னுரிமை கொடுப்பர். அதனால், பெரும்பாலான மக்கள், நேரடியாக இ - சேவை மையங்களுக்கு செல்லாமல், புரோக்கர்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் புரோக்கர்கள், சான்றிதழ் ஒன்றுக்கு, 500 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை லஞ்சமாக பெறுகின்றனர். இதில் பாதித்தொகையை இ - சேவை மைய பணியாளர்களுக்கு வழங்குகின்றனர். அதனால், புரோக்கர்கள் கொடுக்கும் விண்ணப்பங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. நேரடியாக மக்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள், ஏதாவது ஒரு காரணம் சொல்லி நிராகரிக்கப்படுகின்றன.
கோவை, கலெக்டர் அலுவலக பழைய கட்டடத்தில் இயங்கும் இ - சேவை மையத்தில், கடந்த 17ம் தேதி விண்ணப்பிக்கச் சென்ற கோவை சிங்காநல்லுாரை சேர்ந்த, சுமதி, 38, வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வந்திருந்தார். 'சர்வர் ' பிரச்னை என்ற காரணத்தை சொல்லி, புரோக்கர்கள் வாயிலாக விண்ணப்பிக்க இ - சேவை பணியாளர்கள் அறிவுறுத்தினர்.
அதே நாளில், சின்னியம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலசுப்ரமணியன், தனது குழந்தைகளுக்கு கல்வி உதவி பெறவும், சுங்கத்தை சேர்ந்த மலர்க்கொடி, குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் பெறவும் வந்திருந்தனர். இவர்களையும் புரோக்கரை சந்திக்கும் படி இ - சேவை மையப் பணியாளர்கள் அறிவுறுத்தினர்.அவர்கள் கோபமடைந்து, கலெக்டரிடம் புகார் கொடுக்கச் சென்றனர். தொடர்கதையாக நீடிக்கும் இந்த லஞ்ச வேட்டைக்கு, கலெக்டர் அதிரடியாக முற்றுப்புள்ளி வைப்பது அவசியம்.
அனுப்பினார் சுற்றறிக்கை!
இது குறித்து கலெக்டர் ஹரிஹரனிடம் கேட்டபோது, ''கோவையிலுள்ள இ - சேவை மையங்களை கண்காணிக்க சம்மந்தப்பட்ட தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்படும். மக்கள் சேவையில் ஈடுபடாமல், புரோக்கர்களுக்கு ஆதரவாக செயல்படும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். சொன்னதைப் போலவே, இ - சேவை மையங்களில் புரோக்கர்களைத் தவிர்த்து, மக்களுக்கு சேவையாற்றுமாறு இ - சேவை மையங்களுக்கு சுற்றறிக்கையும் கலெக்டர் அனுப்பி வைத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

                  2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேற்கண்ட 3 தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேலும் சிலரும் மேல்முறையீட்டு மனுக் கள் தாக்கல் செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை அப்போதைய தலைமை நீதிப...