சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று கைது செய்தனர்
மதுரையை தீக்கதிர் பகுதியைச் சேர்ந்த முருகசேன் என்பவர் சொத்து மதிப்பு சான்றிதழ் பெற மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வடக்கு வட்டாசியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரகுராமனை அணுகி உள்ளார்.
சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரகுராமன் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டதை அடுத்து முருகேசன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆலோசனையின் பேரில் முருகேசன் இரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ரகுராமிடம் லஞ்சமாக கொடுக்கும் பொழுது மறைந்து இருந்த டி.எஸ்.பி பாண்டியராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரகுராமனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்..

Comments
Post a Comment