Skip to main content

அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை

அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இன்று(21/05/2018) இளையதலைமுறை, சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து அளித்தோம். இதற்குண்டான நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினர். அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை முடிவில் உள்ள சட்ட சிக்கல்களை பற்றியும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கினார்.

இது சம்பந்தமான மற்ற துறை அமைச்சர்களான மருத்துவ கல்வித்துறை, வனத்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை, மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகிய அனைவரின் செக்கரட்டரியை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை மனுவை அளித்தோம். அமைச்சர்களின் பார்வைக்கு எடுத்து செல்கிறோம் என வாக்குறுதி அளித்தனர்.

5% மட்டுமே உள்ள அரசு கல்லூரிகளில் 90% தனியார் பள்ளி மாணவர்களே ஆக்கிரமிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் மாதம் ரூ. 500 பள்ளி கட்டணம் கூட கட்ட முடியாத ஏழை அரசு பள்ளி மாணவரால் எவ்வாறு தனியார் கல்லூரிகளில் ரூ. 50000 என கட்டணம் கட்டி படிக்க முடியும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் cmcell மூலம் அரசை வலியுறுத்த வேண்டுகிறோம்.

நன்றி,
இளையதலைமுறை

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குரு காலமானார்

பாமக காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சற்று முன்  உயிரிழந்தார். வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் குரு. வன்னியர் சமூக நலனுக்காக குரல் கொடுத்து வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாகவும் இருந்தார் காடுவெட்டி குரு.