Skip to main content

குடிபோதையில் இரவில் வீட்டைத் தட்டும் நபர்

பரமத்தி வேலூர் தாலுக்கா கபிலர்மலை அருகே உள்ளது தெற்கு செல்லப்பம்பாளையம் அருந்ததியர் தெரு. இங்கு சுமார் நூறுக்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் குடித்து விட்டு வந்து குடிபோதையில் எல்லோர் வீட்டிலும் நுழையும் வெட்டு மணிகண்டன் என்பவரால் சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் ஊர் பெண்மணிகள். இவர் வேறு சமூகத்தை  சேர்ந்தவர் ஆவார். இதைப் பலரும் தட்டிக்கேட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு காரணம் நீதான் என உள்ளூர்க்காரர் ஒருவரை அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைப்பற்றி பல முறை காவல்துறையில் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லாததால் பொதுமக்கள் திரண்டு காவல்நிலையம் வந்து புகார் அளித்துள்ளனர். தவறான நடத்தை மற்றும் குடிபோதையில் தகராறில் ஈடுபடும் சம்பந்தபட்ட நபர் மீது
மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்தால் பிரச்சனை சுமூகமாக முடியம்...

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது