பரமத்தி வேலூர் அடுத்த சித்தம்பூண்டியில் கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடியவர் வீட்டருகே நேற்று இரவு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டு மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வைத் தொடர்ந்து இரண்டு பேரைக் கைது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கனிமக்கொள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் வீட்டின் மீது வெடி குண்டு வீச்சால் அப்பகுதியல் பரபரப்பு நிலவி வருகிறது.
பரமத்திவேலூர் வட்ட சித்தம்பூண்டி கிராமத்தில் மூன்று கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது அதன் அருகிலேயே இரண்டு குவாரிகள் புதிதாக செயல்பட அனுமதியும் பெற்றுள்ளதாக தெரிகிறது. பல கட்டமாக மனுக்கள் மூலமே போராட்டம் நடத்தி வந்த மக்கள் கடந்த மாதம் முதல் லாரிகள் சிறைபிடிப்பு, குவாரி முற்றுகை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து குவாரியில் கல் எடுக்கத் தடை விதிப்பதாக வாய்வழி உத்திரவாதம் கொடுத்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் ஒன்பது மணி அளவில் ரஞ்சித்குமார் என்பவரின் வீட்டை ஒட்டி உள்ள நல்லான்(55) என்பவரது வீட்டில் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. கனிமக் கொள்ளை போராட்டக்குழுவில் ராஜேந்திரன் மகன் ரஞ்சித் குமாரும் ஒருவர். தகவலறிந்த நல்லூர் காவல்துறையினர் வேலகவுண்டம்பட்டி காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டதில் மாலை ஆறுமணிக்கு ரஞ்சித்குமாருடைய தாயாரும் தங்கையும் வீட்டை ஒட்டி உள்ள சாலையில் நின்று கொண்டிருக்கையில் மெதுவாக வந்த ஆம்னிகாரில் வந்தவர்கள் தகாத வார்த்தைகள் பேசி கிண்டலடித்துள்ளனர். அதைத் தொடரந்து உள்ளூர் இளைஞர்கள் தடுத்து நிறுத்தி தட்டிக்கேட்டு மிரட்டி அனுப்பி உள்ளனர். அந்த காரை ஓட்டி வந்தவர் பக்கத்து ஊரைச்சேர்ந்தவர். இவரையும் அந்த கார் உரிமையாளரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பயன்படுத்திய வெடிகுண்டு பாறைகளை உடைக்க மற்றும் மீன் பிடிக்கப் பயன்படும் டெட்டனேட்டர் வகைஅயை சேர்ந்தவை என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சாதாரண பிரச்சனைக்காகவா வெடிகுண்டு வீசப்பட்டது என பலவித கேள்விகள் எழுந்துள்ளது. சம்பந்தபட்ட நபர்கள் தலைமறைவாக உள்ளதால் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பிடிபடும் பட்சத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment