Skip to main content

நிதிநிறுவன அதிபர் தாக்கியதால் சாணிப்பவுடரை குடித்த வாலிபர்

ஈரோடு சடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் - நந்தினி தம்பதியினர் .இதில் குடும்ப சூழ்நிலை காரணமாக சம்பத் நகரை தனியார் நிதி நிறுவன அதிபரிடம்  வார தவனை முறையில் செலுத்தி விடுவதாக கூறி ரூ 15 ஆயிரம் பணத்தை பெருமாள் பெற்றுள்ளார்

பின்னர் பெருமாள் முழுத்தொகையின் பாதி கட்டிய நிலையில் குடும்ப சூழல்காரனமாக பணத்தை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பின்னர் பணத்தை திரும்ப கட்ட முடியாத பெருமாளை நிதி நிறுவனத்தினர் தகாத வார்த்தைகளால் திட்டியும், மனைவியைப் தரக்குறைவாக பேசியும் உள்ளனார்

இந்த நிலையில் பெருமாள் நேற்று மாலையில் வீட்டில் இருந்த பழுதடைந்த டி.வி.யை சரி செய்ய சாலை வந்து கொண்டிருந்த போது அப்போது எதிரே வந்த நிதி நிறுவன அதிபர் பெருமாளை குண்டு கட்டாக தூக்கி நிதி நிறுவன அலுவலகத்திற்கு கொண்டு சென்று சராமரியாக தாக்கியுள்ளனர்

இதனால் அவமானம் அடைந்த பெருமாள் தான் இருப்பதை விட சாகுவதே மேல் என நினைத்து வீட்டில் இருந்த சாணிப்பவுடரைக் குடித்து உள்ளார்.

பின்னர்  அப்பகுதியில் இருந்தவர்கள் சாணிப்பவுடரை குடித்த பெருமாளை சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்...

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

எத்திலின் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை!

வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவு சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் கடை உரிமையாளர்கள் இடையே எத்தலின் மூலம் பழங்களை பழுக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மத்திய உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட என்ரிப் (en-rip) மூலம் பழுக்க வைப்பது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், *எத்தலினை பயன்படுத்தும் கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.