ஈரோடு சடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் - நந்தினி தம்பதியினர் .இதில் குடும்ப சூழ்நிலை காரணமாக சம்பத் நகரை தனியார் நிதி நிறுவன அதிபரிடம் வார தவனை முறையில் செலுத்தி விடுவதாக கூறி ரூ 15 ஆயிரம் பணத்தை பெருமாள் பெற்றுள்ளார்
பின்னர் பெருமாள் முழுத்தொகையின் பாதி கட்டிய நிலையில் குடும்ப சூழல்காரனமாக பணத்தை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பின்னர் பணத்தை திரும்ப கட்ட முடியாத பெருமாளை நிதி நிறுவனத்தினர் தகாத வார்த்தைகளால் திட்டியும், மனைவியைப் தரக்குறைவாக பேசியும் உள்ளனார்
இந்த நிலையில் பெருமாள் நேற்று மாலையில் வீட்டில் இருந்த பழுதடைந்த டி.வி.யை சரி செய்ய சாலை வந்து கொண்டிருந்த போது அப்போது எதிரே வந்த நிதி நிறுவன அதிபர் பெருமாளை குண்டு கட்டாக தூக்கி நிதி நிறுவன அலுவலகத்திற்கு கொண்டு சென்று சராமரியாக தாக்கியுள்ளனர்
இதனால் அவமானம் அடைந்த பெருமாள் தான் இருப்பதை விட சாகுவதே மேல் என நினைத்து வீட்டில் இருந்த சாணிப்பவுடரைக் குடித்து உள்ளார்.
பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் சாணிப்பவுடரை குடித்த பெருமாளை சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்...
Comments
Post a Comment