Skip to main content

பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆதித் தமிழர் கட்சி நிர்வாகிகள் இருவர் கைது

திருச்செங்கோட்டில் மகளிர் காவல்நி நிலையத்தில் புகார் அளிப்பது சம்பந்தமாக சென்றபோது, பணியல் இருந்த அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆதித் தமிழர் கட்சியின் மாநிலப் செயலாளர் சுப.இளங்கோவனையும், அவருடன் சென்ற ஜெயப்பிரகாஷ் என்பவரையும்  கைது செய்தனர். பின்னர் நீதிபதியிடம் இருவரையும் ஆஜர்படுத்தியபோது 15 நாட்கள் காவலில் வைக்க  நீதிபதி தனம் உத்தரவிட்டார்.

குடும்ப பிரச்சனை சம்பந்தமாக பேச சென்றபோது காவல்நிலையத்தில் இருந்த ஆய்வாளர் மரியாதை இல்லாமல், தகாத வார்த்தைகளில்  பேசியதால் சுப.இளங்கோவனும் பதில் மட்டுமே அளித்துள்ளார்.
இந்த நிலையில் அவரை வெளியில் விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

திருச்செங்கோட்டில் பொய்வழக்கு புனைந்து, கைது செய்யப்பட்ட ஆதித் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் சுப.இளங்கோவனை விடுதலை செய்யக் கோரியும்,  சமூக விரோதிகளையும்  குற்றவாளிகளையும்  நடத்துவது போல தடத்தியதோடு,  யாரிடமும் அவரைக் காட்டாமல் பேச விடாமல் செய்து  ஏவல்துறையாக மாறி செயல்பட்ட காவல்துறையினரைக்  கண்டித்தும், அம்பேத்கர் காந்தி பேரைந் சொல்லிட்டு கண்ட கண்ட நாயெல்லாம் உள்ளே வந்திடறானுங்க என தரக்குறைவாக பேசிய திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் பாரதி மோகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து  தமிழகம் தழுவிய போராட்டம் நடத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் பாரதி மோகன் எண்ணில் தொடர்பு கொண்டோம்.. நோ ரெஸ்பான்ஸ்...

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குரு காலமானார்

பாமக காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சற்று முன்  உயிரிழந்தார். வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் குரு. வன்னியர் சமூக நலனுக்காக குரல் கொடுத்து வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாகவும் இருந்தார் காடுவெட்டி குரு.