திருச்செங்கோட்டில் மகளிர் காவல்நி நிலையத்தில் புகார் அளிப்பது சம்பந்தமாக சென்றபோது, பணியல் இருந்த அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆதித் தமிழர் கட்சியின் மாநிலப் செயலாளர் சுப.இளங்கோவனையும், அவருடன் சென்ற ஜெயப்பிரகாஷ் என்பவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிபதியிடம் இருவரையும் ஆஜர்படுத்தியபோது 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி தனம் உத்தரவிட்டார்.
குடும்ப பிரச்சனை சம்பந்தமாக பேச சென்றபோது காவல்நிலையத்தில் இருந்த ஆய்வாளர் மரியாதை இல்லாமல், தகாத வார்த்தைகளில் பேசியதால் சுப.இளங்கோவனும் பதில் மட்டுமே அளித்துள்ளார்.
இந்த நிலையில் அவரை வெளியில் விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
திருச்செங்கோட்டில் பொய்வழக்கு புனைந்து, கைது செய்யப்பட்ட ஆதித் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் சுப.இளங்கோவனை விடுதலை செய்யக் கோரியும், சமூக விரோதிகளையும் குற்றவாளிகளையும் நடத்துவது போல தடத்தியதோடு, யாரிடமும் அவரைக் காட்டாமல் பேச விடாமல் செய்து ஏவல்துறையாக மாறி செயல்பட்ட காவல்துறையினரைக் கண்டித்தும், அம்பேத்கர் காந்தி பேரைந் சொல்லிட்டு கண்ட கண்ட நாயெல்லாம் உள்ளே வந்திடறானுங்க என தரக்குறைவாக பேசிய திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் பாரதி மோகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து தமிழகம் தழுவிய போராட்டம் நடத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் பாரதி மோகன் எண்ணில் தொடர்பு கொண்டோம்.. நோ ரெஸ்பான்ஸ்...
Comments
Post a Comment