Skip to main content

அடுத்த ஆப்பு ஏர்டெல்லுக்கு

ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பால் அதன் போட்டி நிறுவனமான ஏர்டெல், 12,000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது.

தொலைத்தொடர்ப்புத் துறையில் கோலோய்ச்சி வந்த ஏர்டெல், ஐடியா நிறுவனங்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் Postpaid திட்டத்தினை நேற்று அறிவித்தது.

199 ரூபாய் மாதாந்திர திட்டத்தில் சர்வதேச அழைப்புகள் நிமிடத்திற்கு 50 பைசா என்ற கட்டணத்தில் மேற்கொள்ளலாம் என்ற ஜியோவின் அறிவிப்பு வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஜியோவின் அறிவிப்பு இன்று பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சந்தை தொடங்கியதும் ஏர்டெல் மற்றும் ஐடியாவின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. நேற்று மும்பை பங்குச்சந்தை முடிந்த நேரத்தில் 412.25 ஆக இருந்த ஏர்டெல்லின் பங்கு மதிப்பு இன்று 381.2 ஆக சரிந்தது.

நேற்று பங்குச்சந்தையில் 1,64,793 கோடி ரூபாயாக இருந்த ஏர்டெல்லின் மூலதனமதிப்பு, இன்று 1,52,421 கோடிகளாக சரிந்துள்ளது. இதன் மூலம் 12,372 கோடி ரூபாயை ஏர்டெல் நிறுவனம் இழந்துள்ளது. 

ஏர்டெல்லின் 199 ரூபாய் மாதாந்திர போஸ்ட்பெய்ட் திட்டம் வரும் மே 15ஆம் தேதியன்று அமலுக்கு வருகிறது. இதில் சேரும் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு காப்புத் தொகையும் செலுத்தத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எல்லையற்ற வாய்ஸ் கால்கள், மெசேஜ்கள், 4ஜி வேகத்தில் 25 ஜிபி டேட்டா ஆகியவை கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது