இராசிபுரம் தட்டான் குட்டை ஏரியில் ஆக்கிரமிப்பினை தடுக்க கோரியும்
ஆக்கிமிப்புக்கு பயன்படுத்தி வரும் 3- பொக்லைன் 5-லாரிகள், 2 டிராக்டர்களை பறிமுதல் செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராசிபுரம் வட்டம், இராசிபுரம் ஒன்றியம், சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டான்குட்டை ஏரி உள்ளது. ஷை ஏரியை ஒட்டி இராசிபுரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் (உரக்கிடங்கு) உள்ளது.
இராசிபுரம் நகராட்சி தட்டான்குட்டை ஏரியை சுமார் 10 ஏக்கர் அளவில் கடந்த இரண்டு நாட்களாக ஆக்கிரமிப்பு செய்து கொன்டுள்ளது. 3 பொக்லைன்கள், 5 டிப்பர் லாரிகள், 2 டிராக்டர்களை பயன்படுத்தி 21.05.2018 இரவு முதல் இராசிபுரம் நகராட்சி தன்னுடைய குப்பை கிடங்கில் உள்ள பழைய குப்பைகள், கட்டிட கழிவுகள் மக்காத குப்பைகள் ஆகியவற்றை ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கொட்டி ஏரியை குப்பை மேடாக்கி வருகின்றார்கள்.
ஏரியின் நீரில் தற்சமயம் நகராட்சி கொட்டி வரும் குப்பைகளால் நீர் மாசடைந்து ஏரியில் உள்ள மீன்கள் பாதிகப்பட்டுள்ளது. ஏரியின் நீராதாரத்தை நம்பி சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளும் ஆள்துளைக் கிணறுகளும் உள்ளது மேலும் சந்திரசேகரபுரம் ஊராட்சி குடிநீர் திட்ட கிணறுகளும் இந்த ஏரியில் உள்ளது ஷை நீர் ஆதாரங்கள் நகராட்சி குப்பையை ஏரியில் கொட்டுவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே தட்டான்குட்டை ஏரியில் குப்பைக் கொட்டி சுமார் 10 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பு செய்து வரும் இராசிபுரம் நகராட்சி ஊழியர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்தும் ஆக்கிரமிப்புக்கு பயன்படுத்திக் கொண்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்தும் ஏரியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment