உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு இன்றைக்கு தாக்கல் செய்த காவிரி குறித்தான அறிக்கையும் பெரும் ஏமாற்றமே. பெயரை மாற்றுவது, தலைமியிடத்தை மாற்றுவது, மத்திய அரசு பொறுப்பு என்கிற வார்த்தையை திரும்பப்பெறுவது என சொன்ன அனைத்து விஷயங்களும் மேம்போக்கானவை.
தண்ணீர் திறந்துவிடும் உரிமை யாரிடம் இருக்கும் என்பதும், காவிரி அணையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் (மேட்டூர் உட்பட) பொறுப்பு, நிர்வாகம், பராமரிப்பு என அனைத்தும் யாரிடம் இருக்கும் என்பதுதான் முக்கியமான விஷயம்.
மேற்ச்சொன்னவை அனைத்தும் மேலாண்மை வாரியத்திடம் இருக்கும் என்று சொல்வது மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க ஒரே வழி என்கிறார் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜ்.
Comments
Post a Comment