நாமக்கல் மாவட்ட பரமத்திவேலூர் வட்ட பரமத்தியை அடுத்த வசந்தபுரத்தில் கந்தம்பாளையம் அரிமா சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இரத்தவங்கியினர் இணைந்து ஸ்ரீராமமூர்த்தி உயர்நிலைப்பள்ளியில் இரத்ததான முகாம் நடத்தினர். இதில் 30பேர் இரத்த தானம் செய்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் கௌரி, இரத்தவங்கி மருத்துவ அலுவலர் அன்புமலர் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கவியரசு நண்பர்கள் விழா ஒத்துழைப்பு நல்கினர்.
Comments
Post a Comment