குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.குற்றாலத்தில் சீசன் துவங்கி விட்டதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. குற்றாலத்தில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. வெயிலும் சாரல் மழையும் மாறிமாறி வந்ததால் மிகவும் ரம்யமான சூழ்நிலை நிலவியது. ஐந்தருவி பகுதியில் அதிகமாக குளிர் காணப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறைந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்றால் போல் தண்ணீர் பரவலாக விழுந்தது. இதனால் உற்சாகமடைந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.
பழையகுற்றால அருவி, புலியருவி, சிற்றருவியிலும் தண்ணீர் வரத்துக்கு குறைவில்லை. தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவ,மாணவிகளின் கூட்டம் குற்றாலத்தில் அதிகமாக காணப்படுகிறது. குற்றாலம் மலைப்பகுதியில் சாரல் மழையின் ஆதிக்கத்தால் அப்பகுதி ஊட்டி, கொடைக்கானல் போல் காட்சி அளித்தது. மழை மேகக்கூட்டங்கள் பொதிகை மலையை தழுவிச் செல்லும் காட்சியை திரளான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.
Comments
Post a Comment