Skip to main content

குவாரிகளைத் தடைசெய்யக் கோரி நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை



நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் சித்தம்பூண்டியில் செயல்பட்டு வரும் குவாரிகளைத் தடைசெய்யக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர்.



பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் குவாரியால் வீடுகள் மற்றும் கோவில்கள் பாதிப்படைந்து உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான முறையில் கீழிறங்கி விட்டது. விவசாயம் அழிந்து, நீரும் நச்சாகி விட்டது. விடிய விடிய வெடிகள் வெடிப்பதால் மக்களும் நிம்மதி இன்றி தவிக்கின்றனர் என புகார் மேல் புகார் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடுமையான பாதிப்புக்குள்ளான மக்கள் மக்கள் கடந்த வாரம் குவாரியில் இருந்து வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டங்களை விரிவுபடுத்துவதாக கூறியிருந்த நிலையில் தான் இருநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாமக்கல் ஆட்சியர் அலுவலக முற்றுகையில் ஈடுபட்டனர். குவாரிகளை மூடும் வரை போராட்டம் தொடரும் என்கின்றனர் சித்தம்பூண்டி பாதுகாப்பு போராட்டக்குழுவினர். குவாரிகளைத தடைசெய்யக்கோரி ஆதிதமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது