நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் சித்தம்பூண்டியில் செயல்பட்டு வரும் குவாரிகளைத் தடைசெய்யக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர்.
பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் குவாரியால் வீடுகள் மற்றும் கோவில்கள் பாதிப்படைந்து உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான முறையில் கீழிறங்கி விட்டது. விவசாயம் அழிந்து, நீரும் நச்சாகி விட்டது. விடிய விடிய வெடிகள் வெடிப்பதால் மக்களும் நிம்மதி இன்றி தவிக்கின்றனர் என புகார் மேல் புகார் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடுமையான பாதிப்புக்குள்ளான மக்கள் மக்கள் கடந்த வாரம் குவாரியில் இருந்து வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டங்களை விரிவுபடுத்துவதாக கூறியிருந்த நிலையில் தான் இருநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாமக்கல் ஆட்சியர் அலுவலக முற்றுகையில் ஈடுபட்டனர். குவாரிகளை மூடும் வரை போராட்டம் தொடரும் என்கின்றனர் சித்தம்பூண்டி பாதுகாப்பு போராட்டக்குழுவினர். குவாரிகளைத தடைசெய்யக்கோரி ஆதிதமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
Post a Comment