Skip to main content

ஜம்போ சர்க்கஸ் நாமக்கல்லில் துவங்கியது.

நூற்றுக்கும் மேற்பட்ட  சர்க்கஸ் கலைஞர்களை    கொண்ட   மாபெரும்  ஜம்போ சர்க்கஸ் நாமக்கல்லில் துவங்கியது. கந்தசாமி கண்டர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் மாலை 7 மணிக்கு துவங்கியது. நாமக்கல் நகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியன் சர்க்கஸ் நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கினார். வந்திருந்த அனைவரையும் சர்க்கஸ் மேனேஜர் ஜார்ஜ் வரவேற்றார்.

பள்ளிகள் விடுமுறை என்பதால் நூற்றுக்கணக்கான மாணவர்களும் சிறுவர்களும்,  பெற்றோர்களும் ஆர்வத்துடன் திரண்டு வந்து இருந்தனர். சர்க்கஸ் கலைஞர்கள் பல்வேறு விதமான ரிங் விளையாட்டு, பார் விளையாட்டு செய்தனர். ஒட்டகங்கள் நடை பயணம், நாய்களின் பல்வேறு சறுக்கு   விளையாட்டுகள் சிறுவர்களை மிகவும் கவர்ந்தது. ஒரு சர்க்கஸ் வீரர் சிறிய  டென்னிஸ் பேட்டில் தனது உடல் பூராவையும்  நுழைத்து எடுத்ததும்.,உடலை  ஒடித்து மடக்கி எடுத்ததும் கைதட்டலை பெற்றது. 30 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் விடுமுறை என்பதால் சிறுவர் பெரியவர்களுக்கும் வசதியான பொழுது போக்காக சர்க்கஸ் அமைந்து விட்டது.


Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

எத்திலின் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை!

வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவு சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் கடை உரிமையாளர்கள் இடையே எத்தலின் மூலம் பழங்களை பழுக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மத்திய உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட என்ரிப் (en-rip) மூலம் பழுக்க வைப்பது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், *எத்தலினை பயன்படுத்தும் கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.