நூற்றுக்கும்
மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்களை கொண்ட மாபெரும் ஜம்போ
சர்க்கஸ் நாமக்கல்லில் துவங்கியது. கந்தசாமி கண்டர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் மாலை 7
மணிக்கு துவங்கியது. நாமக்கல் நகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியன் சர்க்கஸ்
நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கினார். வந்திருந்த அனைவரையும்
சர்க்கஸ் மேனேஜர் ஜார்ஜ் வரவேற்றார்.
பள்ளிகள்
விடுமுறை என்பதால் நூற்றுக்கணக்கான மாணவர்களும் சிறுவர்களும், பெற்றோர்களும்
ஆர்வத்துடன் திரண்டு வந்து இருந்தனர். சர்க்கஸ் கலைஞர்கள் பல்வேறு விதமான ரிங்
விளையாட்டு, பார் விளையாட்டு செய்தனர். ஒட்டகங்கள் நடை பயணம், நாய்களின் பல்வேறு சறுக்கு விளையாட்டுகள்
சிறுவர்களை மிகவும் கவர்ந்தது. ஒரு சர்க்கஸ் வீரர் சிறிய டென்னிஸ்
பேட்டில் தனது உடல் பூராவையும் நுழைத்து எடுத்ததும்.,உடலை ஒடித்து
மடக்கி எடுத்ததும் கைதட்டலை பெற்றது. 30 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் விடுமுறை
என்பதால் சிறுவர் பெரியவர்களுக்கும் வசதியான பொழுது போக்காக சர்க்கஸ் அமைந்து
விட்டது.
Comments
Post a Comment