நாமக்கல் மாவட்ட பரமத்தி வேலூர் வட்ட நடந்தை, இருக்கூர், கபிலக்குறிச்சி ஊராட்சி எல்லைகளுக்குட்பட்ட குறிப்பாக நடந்தை ஊராட்சி பெரிய சூரம்பாளையம் பகுதியில் செயல்படும் கல்குவாரியில் விடிய விடிய வெடி வெடிக்கப்படுவதால் சுற்றுப்புற ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவதி.
கணக்கில்லாமல் வெட்டி எடுக்கப்படும் கனிமத்தாலும், வெடிகளாலும் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் நீராதாரம் பாதிக்கும் அவலம்... அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல். குவாரியை தடை செய்யாவிட்டால் சித்தம்பூண்டி குவாரியைத் தடை செய்ய நடந்த போராட்டம் போல பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Comments
Post a Comment