Skip to main content

அரசு பள்ளிகளில் கட்டணம் வசூல் : கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை

அரசு பள்ளிகளில்,கூடுதல் கட்டணம் வசூலித்தால்,

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித் துறை எச்சரித்து உள்ளது. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், தமிழ் வழி மாணவர்களுக்கு, எந்த கட்டணமும் இல்லை.

ஆங்கில வழி மாணவர்களுக்கு, ஆறு முதல் எட்டு வரை, 200 ரூபாய்; 9, 10ம் வகுப்புக்கு, 250 ரூபாய்; பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 500 ரூபாய் என, ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல அரசு மற்றும் அரசு உதவி பள்ளி களில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெயரில், ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துவதாக, புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளியை நடத்த, அரசுக்கு உதவுவதாகக் கூறி, பதவியை தவறாக பயன்படுத்துவதாக, புகார்கள் வந்துள்ளன.

தாங்களே கட்டணம் நிர்ணயித்து, மாணவர்களின் பெற்றோரிடம் வசூலிப்பது, அரசு வழங்கும் இலவச புத்தகம், சீருடைகளுக்கு கட்டணம் வசூலிப்பது என, அராஜக செயலில் ஈடுபடுவதாக, கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன.

இதையடுத்து, மாவட்டங்களில் ஆய்வு நடத்தவும், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களிடம் அதிக கட்டணம் கேட்டு, துண்டுச்சீட்டு அனுப்பியதும், புதிதாக சேரும் மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கும் நோக்கில், நுழைவு தேர்வு நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி, 'தலைமை ஆசிரியரை மீறி, பள்ளி நிர்வாகத்தில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தலையிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தனர். மேலும், 'எந்த பள்ளியிலும், அரசின் கட்டணத்தை மீறி வசூலிக்கக் கூடாது. அவ்வாறு நடந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது, போலீசில் புகார் அளித்து, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் கூறியுள்ளனர். 

Comments

Popular posts from this blog

செக் வைக்கும் ஆந்திர முதல்வர்

பாலியல் வன்கொடுமை விவகாரம் -  செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால்  ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.