Skip to main content

அரசு பள்ளிகளில் கட்டணம் வசூல் : கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை

அரசு பள்ளிகளில்,கூடுதல் கட்டணம் வசூலித்தால்,

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித் துறை எச்சரித்து உள்ளது. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், தமிழ் வழி மாணவர்களுக்கு, எந்த கட்டணமும் இல்லை.

ஆங்கில வழி மாணவர்களுக்கு, ஆறு முதல் எட்டு வரை, 200 ரூபாய்; 9, 10ம் வகுப்புக்கு, 250 ரூபாய்; பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 500 ரூபாய் என, ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல அரசு மற்றும் அரசு உதவி பள்ளி களில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெயரில், ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துவதாக, புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளியை நடத்த, அரசுக்கு உதவுவதாகக் கூறி, பதவியை தவறாக பயன்படுத்துவதாக, புகார்கள் வந்துள்ளன.

தாங்களே கட்டணம் நிர்ணயித்து, மாணவர்களின் பெற்றோரிடம் வசூலிப்பது, அரசு வழங்கும் இலவச புத்தகம், சீருடைகளுக்கு கட்டணம் வசூலிப்பது என, அராஜக செயலில் ஈடுபடுவதாக, கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன.

இதையடுத்து, மாவட்டங்களில் ஆய்வு நடத்தவும், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களிடம் அதிக கட்டணம் கேட்டு, துண்டுச்சீட்டு அனுப்பியதும், புதிதாக சேரும் மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கும் நோக்கில், நுழைவு தேர்வு நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி, 'தலைமை ஆசிரியரை மீறி, பள்ளி நிர்வாகத்தில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தலையிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தனர். மேலும், 'எந்த பள்ளியிலும், அரசின் கட்டணத்தை மீறி வசூலிக்கக் கூடாது. அவ்வாறு நடந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது, போலீசில் புகார் அளித்து, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் கூறியுள்ளனர். 

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

                  2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேற்கண்ட 3 தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேலும் சிலரும் மேல்முறையீட்டு மனுக் கள் தாக்கல் செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை அப்போதைய தலைமை நீதிப...