பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆதித் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் சுப.இளங்கோவனை விடுதலை செய்யக் கோரியும், சமூக விரோதிகளையும் குற்றவாளிகளையும் நடத்துவது போல நடத்திய காவல்துறையினரைக் கண்டித்தும் தரக்குறைவாக பேசிய திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் பாரதிமோகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆதி தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகையில் ஈடுபட்டனர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்சியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.




Comments
Post a Comment