Skip to main content

துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து பள்ளிபாளையத்தில் ஆர்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களின்  கொலையை கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் கொலையில் ஈடுபட்ட அரசு ரவுடிகள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து பணிநீக்கம் செய்ய கோரியும்  இன்று  காலை 10மணி அளவில் தமிழக தேசியக்கட்சி சார்பில்  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்  நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டதில் மாவட்ட செயலாளர் திரு.மு.அன்பரசு தலைமையில் கண்டனவுரை தலைமை
ஒருங்கிணைப்பாளர்
சமத்துவ போராளி அ.ஆதவன் ஆற்றினார்.

நீரோடை தலைவர் தோழர் நிலவன்

தமிழ்நாட்டு மக்கள் இயக்கம் பொதுசெயலாளர் தோழர் தமிழ்செல்வன்

தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் தோழர் செந்தமிழன்

புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் மாணிக்கம்

மக்கள் அதிகாரம் தோழர் பார்திபன்

திரவிடர் விடுதலை கழகம் தோழர் பிரகாசு

CPI ml. கட்சியின் தோழர் வெங்கடேஸ்

தமழ்நாடு வணிகர் சங்கம் வட்டார செயலாளர் திரு ரவிகுமார்

விவசாய சங்கம்
திரு. பன்னீர் செல்வம்

பள்ளிபாளையம் தணியார் மின்சார தொழிலாளர் சங்கம்
செயலாளர் திரு.மாரிமுத்து

மற்றும் முற்போக்கு சக்திகள்
கண்டன உரை நிகழ்த்தினர்

இதில் 80 மேற்பட்ட தமிழக தேசியக்கட்சி மற்றும் முற்ப்போக்கு அமைப்பு தோழர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...