Skip to main content

துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து பள்ளிபாளையத்தில் ஆர்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களின்  கொலையை கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் கொலையில் ஈடுபட்ட அரசு ரவுடிகள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து பணிநீக்கம் செய்ய கோரியும்  இன்று  காலை 10மணி அளவில் தமிழக தேசியக்கட்சி சார்பில்  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்  நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டதில் மாவட்ட செயலாளர் திரு.மு.அன்பரசு தலைமையில் கண்டனவுரை தலைமை
ஒருங்கிணைப்பாளர்
சமத்துவ போராளி அ.ஆதவன் ஆற்றினார்.

நீரோடை தலைவர் தோழர் நிலவன்

தமிழ்நாட்டு மக்கள் இயக்கம் பொதுசெயலாளர் தோழர் தமிழ்செல்வன்

தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் தோழர் செந்தமிழன்

புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் மாணிக்கம்

மக்கள் அதிகாரம் தோழர் பார்திபன்

திரவிடர் விடுதலை கழகம் தோழர் பிரகாசு

CPI ml. கட்சியின் தோழர் வெங்கடேஸ்

தமழ்நாடு வணிகர் சங்கம் வட்டார செயலாளர் திரு ரவிகுமார்

விவசாய சங்கம்
திரு. பன்னீர் செல்வம்

பள்ளிபாளையம் தணியார் மின்சார தொழிலாளர் சங்கம்
செயலாளர் திரு.மாரிமுத்து

மற்றும் முற்போக்கு சக்திகள்
கண்டன உரை நிகழ்த்தினர்

இதில் 80 மேற்பட்ட தமிழக தேசியக்கட்சி மற்றும் முற்ப்போக்கு அமைப்பு தோழர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

எத்திலின் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை!

வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவு சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் கடை உரிமையாளர்கள் இடையே எத்தலின் மூலம் பழங்களை பழுக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மத்திய உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட என்ரிப் (en-rip) மூலம் பழுக்க வைப்பது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், *எத்தலினை பயன்படுத்தும் கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.