Skip to main content

தீத்துக்குடியில் நடந்தது என்ன???

தூத்துக்குடி கலெக்டர் ஆஃபிசிலிருந்து பிரபல ஆங்கில ஊடக நிரூபர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ...

எதிர்கட்சி தலைவர்கள் தூத்துக்குடி சம்பவம் என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் எனக் கூறி வரும் நிலையில் பிரபல ஆங்கில ஊடக பத்திரிக்கையாளர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதேவ் என்ற அந்த நிரூபர் பல விஷங்களை நேரடியாக காட்டி பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு எழுப்புகின்றார். அதில் குறிப்பாக கலெக்டர் அலுவலக வாயிலில் இருக்கும் 2 சிசிடிவி கேமராவும் சொல்லி வைத்தார் போன்று தரையை நோக்கி திருப்பப்பட்டுள்ளது.

கேமரா உடைக்கப்படவில்லை அதை யாரும் தாக்கியது போன்றும் தெரியவில்லை. ஆனால் கலெக்டர் அலுவலக நுழை வாயில் கதவிற்கு மேல் உள்ள இரண்டு கேமராவும் தரையை பார்த்து செங்குத்தாக உள்ளது.

அந்த கேமராக்கள் உயரத்தில் இருப்பதால் அதை உடைப்பது என்பது எளிதல்ல எனவும் அவர் கூறுகின்றார். கலெக்டர் அலுவலகத்திற்குள்ளே பொதுமக்கள் புகுந்தார்கள் என்றால் அதன் சிசிடிவி காட்சிகளை காட்டுக் எனக் கேட்கப்படும் போது கேமரா வேலை செய்யவில்லை எனக் கூறுவதற்காகவா அல்லது மெரினாவில் நடந்தது போன்று நடந்தவைகள் சிசிடிவியில் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகவா என்ற கருத்தில் அந்த நிரூபர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிசிடிவி கேமரா தரையை நோக்கி திருப்பப்பட்ட காரணம் என்ன ? இதே அந்த நீபர் எழுப்பும் முக்கிய கேள்வி.

மேலும் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய ஒரே ஒரு வழி மட்டும் தான் உள்ளது. எப்படி இருக்கு அத்தன போலிசை மீறி பொதுமக்கள் எப்படி உள்ளே நுழைந்து வாகனத்தை கொழுத்தியிருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

அவர் இதற்கு மற்றொரு விசயத்தையும் நேரடியாக காட்டி பேசுகின்றார். கலெக்டர் ஆபிசிற்குள் இருந்த வாகனங்கள் கொழுத்தப்பட்டது. அப்படி கொழுத்தப்பட்ட அனைத்து வாகனங்களுமே தீப்பேட்டியை அடிக்க வைத்த மாறி வரிசையாக குப்புற சாய்த்து நிற்க வைக்கப்பட்டுள்ளது.

இதை சுட்டிகாட்டிய நீரூபர் கலவரத்தில் பொதுவாக ஈடுபடுபவர்கள் இப்படி யோசித்து எல்லாம் வண்டியை சாய்த்து கொழுத்தும் பழக்கம் இல்லை. சாய்த்தால் தான் நன்றாக எரியும் என்ற சிந்தனையெல்லாம் அந்த கலவர நேரத்தில் அவர்களுக்கு எழ வாய்ப்பில்லை என்பதையும் நிரூபர் சுட்டிக்காட்டுகின்றார்.

நான் இங்கே இருந்தவர்களிடம் கேட்டேன் பொதுமக்கள் யாரும் இதை செய்யவில்லை எனக் கூறுகின்றார்கள். நான் எந்த பக்கமும் பேசவில்லை நடுநிலையாக கேள்விகளை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு வைக்கின்றேன் பதில் கிடைக்குமா என அவர் அந்த காணொளியை முடிக்கின்றார்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குரு காலமானார்

பாமக காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சற்று முன்  உயிரிழந்தார். வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் குரு. வன்னியர் சமூக நலனுக்காக குரல் கொடுத்து வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாகவும் இருந்தார் காடுவெட்டி குரு.