Skip to main content

நத்தம் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்-15 பேர் காயம்



திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்பட்டியில் திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கி சென்ற அரசுப் பேருந்து முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நத்தம், திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Comments