கிரானைட் கல் கொண்டு வந்த லாரி சிறைபிடிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்ட பரமத்திவேலூர் வட்டம் சித்தம்பூண்டி கிராமத்தில் இருந்து தினந்தோறும் கனரக வாகனங்கள் மூலம் பெரிய பெரிய கற்கள் கொண்டு செல்லப்படுவதால் சாலைகள் சேதமடைவதாகவும், குவாரிகளால் அக்கிராம மகளின் வீடுகள், கோவில்கள் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைவதாகவும் தொடர்ந்து பல்வேறு அரசு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

நாமக்கல் மாவட்ட பரமத்திவேலூர் வட்டம் சித்தம்பூண்டி கிராமத்தில் இருந்து தினந்தோறும் கனரக வாகனங்கள் மூலம் பெரிய பெரிய கற்கள் கொண்டு செல்லப்படுவதால் சாலைகள் சேதமடைவதாகவும், குவாரிகளால் அக்கிராம மகளின் வீடுகள், கோவில்கள் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைவதாகவும் தொடர்ந்து பல்வேறு அரசு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
அதைத் தொடர்ந்து இன்று வழக்கம்போல் கல் ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏர்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் உதவி ஆய்வாளார் ராதா சொன்னதை பொது மக்கள் ஏற்கவில்லை. இத்தனை நாள் நாங்கள் புகார் கொடுத்தபோது வராத நீங்கள் தற்போது வந்ததின் நோக்கம் என்ன? என எதிர்கேள்வி கேட்டனர். சுமார் இரண்டு மணி நேரமாக லாரியும் சிறை பிடித்த மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



Comments
Post a Comment