வள்ளுவத்தை வாழ்வியலாக்கி, அன்னைத் தமிழையும், வள்ளுவத்தையும் முன்னிலைப்படுத்தி எல்லாவற்றிலும் தமிழை முன்னிலைப்படுத்த வேண்டும் அனைத்து தமிழ் இலக்கிய அமைப்புகள் கோரிக்கை – குழந்தைகளுக்கும், கடைகளுக்கும் நல்ல தமிழில் பெயர் வைக்க வேண்டுமென்றும் கரூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கரூரில், தமிழ் செம்மல் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா கரூர் மாவட்ட தமிழ் இலக்கிய அமைப்புகள் சார்பில் நடைபெற்றது. கரூர் நகரத்தார் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வா.செ.கு.கல்வி ஆய்வு அறக்கட்டளைத் தலைவர் பி.டி.கோச் தங்கராஜ் தலைமை வகித்தார். முன்னதாக,,
முன்னிலை உரை கண் மருத்துவர் ரமேஷ்., ஆரா.பழ.ஈசுவர மூர்த்தி., அமுதா சுப்பிரமணியம் ஆகியோர் ஆற்றினர்., மேலும் தொடர்ந்து
வாழ்த்துரையில்.,
அருணா பொன்னுசாமி,நாவை சிவம், நாச்சிமுத்து, காமராசு, முனைவர் கோவிந்தராசு, சோபிகா பழநியப்பன், அகல்யா மெய்யப்பன், ப.குமாரசாமி, சே.அன்பு, கா.நா.சதாசிவம், உதயச்சந்திரன், மல்லிகாசுப்பராயன், வழக்கறிஞர் கார்த்திகேயன், த .வாசுதேவன், கார்வழி பத்துமலை,
குளித்தலை ராதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,.
மேலும். இந்த கூட்டத்தில், தற்போது தமிழக அரசு வழங்கிய தமிழ்ச்செம்மல் விருது பெற்ற, கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன், பள்ளப்பட்டி பாவலர் எழில்வாணன், பொய்யாமணி வரதசிகாமணி ஆகிய மூன்று பேருக்கும் கரூர் மாவட்ட அனைத்து தமிழ் இலக்கிய அமைப்புகள் சார்பில், பாராட்டுகள் தெரிவித்ததோடு அவர்களை பாராட்டிய தொடு., பணமுடிப்பும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டது
தமிழுறவுப் பெருமன்றம் பழக்கூடை மற்றும் பாராட்டியது.தமிழ்ச் சங்கம் புத்தாடை வழங்கிப் போற்றியது மேலும் இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் தென்னிலை கோவிந்தன், அனைவரையும் வரவேற்றார். மேலும் முனைவர் கடவூர் மணிமாறன், கவிஞர் கருவூர் கன்னல், தமிழன் குமாரசாமி எஸ்தர், நஞ்சைப்புகளூர் அழகரசன், தமிழ் இசைச் சங்க செயலாளர் கா.ப.பாலசுப்பிரமணியன், பூக்கடை பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தியதோடு, பல்வேறு இலக்கிய தமிழ் அமைப்புகள் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சி குறித்து கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனத்தலைவரும், தமிழ் செம்மல் விருது பெற்ற மேலை.பழநியப்பன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், அன்னைத்தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த அனைத்து இடங்களிலும் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும், கடைகள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டுமென்றும், மேலும், வாழ்வியலில் திருக்குறளையும், தமிழையும் முன்னிலைப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.
Comments
Post a Comment