Skip to main content

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டது ஜெம் நிறுவனம்!

போராட்டத்திற்கு வெற்றி.. நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம்!

தமிழகத்தின், நெடுவாசலில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை ஜெம் லெபாலட்டரிஸ் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசால் மாற்றப்பட்டது. கடந்த வருடம் மார்ச் மாதம், இந்த ஒப்பந்தம் முடிவானது. இதையடுத்து ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவக்க ஆயத்தமானது. ஆனால், சுற்றுச்சூழல் சீர்கேடு கருதி, பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து பெரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

பொதுமக்கள் போராட்டத்தையடுத்து, ஜெம் நிறுவனத்திற்கு தமிழக அரசு குத்தகையை மாற்றித்தரவில்லை. ஜெம் நிறுவனம் தமிழக அரசுக்கு் இதுவரை10 கடிதங்கள் எழுதியும், மத்திய அரசு 3 கடிதங்கள் எழுதி கோரிக்கைவிடுத்தும், தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து, நெடுவாசலுக்கு பதில் வேறு இடம் ஒதுக்குமாறு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்திற்கு ஜெம் நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தாமதமாவதால் இழப்பு ஏற்படுவதால் வேறு இடத்தை வழங்க ஜெம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனவே, விரைவில் மத்திய அரசு வேறு இடத்தை ஒதுக்கினால், நெடுவாசலில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் கைவிடும் என தெரிகிறது. இது பொதுமக்களின் ஒற்றுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது