செய்தியாளர்கள் மீது தருமபுரி மாவட்ட போலீசார் தொடரும் தாக்குதலை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்(TUJ) வண்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில அமைப்புசெயலாளர் அ.தமிழ்செல்வன், மாவட்டசெயலாளர் ஜி.லெனின் விடுத்துள்ள அறிக்கை...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்ட தினமலர் நாளிதழ் செய்தியாளராக பணியாற்றுபவர் ஶ்ரீதர். இவர் தன் குடுபத்துடன் சேலம் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பி வரும்பொழுது மே 4 ம் தேதி காலை 4 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்ட பெரும்பாலை காவல்நிலைய தலைமை காவலர் சக்திவேல் என்பவர் ஶ்ரீதர் தன் குடும்பத்துடன் வந்த ஆம்னி காரை சோதனையிட்டார். அப்போது ஶ்ரீதர் நான் தினமலர் செய்தியாளர் என்று தெரிவித்துள்ளார். நீ தான் என்னை லஞ்சம் வாங்கியதாக எஸ்பி யிடம் புகார் கூறினாய் என்று சொல்லி ஶ்ரீதரை சக்திவேல் கல்லால் தாக்கியும் வயிற்றிலும் மார்பிலும் அடித்துள்ளார். கடுமையான பாதிக்குள்ளான ஶ்ரீதர் ரத்த வெள்ளத்தில் மயங்கிவிழுந்தார். பிறகு ஶ்ரீதரை உறவினர்கள் சிகிச்சைக்காக தருமபுரி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தருமபுரி மாவட்டத்தில் செய்தியாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. இச்செயலை தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. செய்தியாளர் ஶ்ரீதர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பெரும்பாலை காவல்நிலைய தலைமை காவலர் சக்திவேல் மீது வழக்கு பதிந்து கைதுசெய்யவேண்டும் என தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் தருமபுரி மாவட்ட காவல்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறது.
இந்த நிலையில் தர்மபுரியில் லோட்டஸ் செய்தியாளரை தாக்கிய தலைமை காவலர் 6 மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Comments
Post a Comment