Skip to main content

தருமபுரி செய்தியாளர் மீது போலீஸ் கொலைவெறி தாக்குல்!


செய்தியாளர்கள் மீது தருமபுரி மாவட்ட போலீசார் தொடரும் தாக்குதலை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்(TUJ) வண்மையாக  கண்டிக்கிறது.  தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில அமைப்புசெயலாளர் அ.தமிழ்செல்வன், மாவட்டசெயலாளர் ஜி.லெனின் விடுத்துள்ள அறிக்கை...




தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்ட தினமலர் நாளிதழ் செய்தியாளராக பணியாற்றுபவர் ஶ்ரீதர். இவர்  தன் குடுபத்துடன் சேலம் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பி வரும்பொழுது மே 4 ம் தேதி காலை 4 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்ட பெரும்பாலை காவல்நிலைய தலைமை காவலர் சக்திவேல் என்பவர்  ஶ்ரீதர் தன் குடும்பத்துடன் வந்த ஆம்னி காரை சோதனையிட்டார். அப்போது ஶ்ரீதர் நான் தினமலர் செய்தியாளர் என்று தெரிவித்துள்ளார்.  நீ தான் என்னை லஞ்சம் வாங்கியதாக எஸ்பி யிடம் புகார் கூறினாய் என்று சொல்லி ஶ்ரீதரை சக்திவேல் கல்லால் தாக்கியும் வயிற்றிலும் மார்பிலும் அடித்துள்ளார். கடுமையான பாதிக்குள்ளான ஶ்ரீதர் ரத்த வெள்ளத்தில் மயங்கிவிழுந்தார். பிறகு ஶ்ரீதரை உறவினர்கள் சிகிச்சைக்காக தருமபுரி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தருமபுரி மாவட்டத்தில் செய்தியாளர்கள் மீது  போலீசார்  தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. இச்செயலை தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. செய்தியாளர் ஶ்ரீதர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பெரும்பாலை காவல்நிலைய தலைமை காவலர் சக்திவேல் மீது வழக்கு பதிந்து கைதுசெய்யவேண்டும் என தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் தருமபுரி மாவட்ட காவல்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறது.

இந்த நிலையில் தர்மபுரியில் லோட்டஸ் செய்தியாளரை தாக்கிய தலைமை காவலர் 6 மாதம்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...