Skip to main content

லாப நோக்கில் பள்ளிகளை நடத்தினால் அங்கீகாரம் ரத்து : மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை

லாப நோக்கில் பள்ளிகளை நடத்தினால் அங்கீகாரம் ரத்து என மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற பள்ளிகளை லாப நோக்கில் நடத்தினால் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கந்தர்வகோட்டை தாலுகா பகுதியில் உள்ள 14 அரசு அனுமதி பெற்ற மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் கணேஷ் அறிவுரையின்படி மாவட்ட கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது பள்ளிகள் பெறவேண்டிய சான்றுகளான தாசில்தார் அனுமதி, கட்டிட உறுதி சான்று, சுகாதாரத்துறை சான்று, தீயணைப்புத்துறை சான்று மற்றும் அரசு அனுமதி உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பள்ளியில் விளையாட்டு மைதானம், ஒரு வகுப்பில் இரண்டு கதவுகள், மாணவ, மாணவிகள் வந்து செல்ல வாகனங்கள், வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம், பள்ளி கட்டண விவரம், போதுமான கட்டிடங்கள், கழிப்பறை வசதிகள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப்பின் மாவட்ட கல்வி அலுவலர் கூறுகையில், லாப நோக்கத்தில் பள்ளிகளை நடத்த திட்டமிட்டால் பள்ளிக்கான அங்கீகார அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது