கர்நாடக தேர்தலில் கிரிமினல் வழக்கு கொண்ட அதிகம் கொண்ட பிஜேபி வேட்பாளர்கள்’ - அதிர்ச்சி தரும் அறிக்கை!
இதேபோன்று வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கிரிமினல் வழக்கு தொடர்பாக ஆராய்ந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்ததாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது. களத்தில் இருக்கும் 2,560 வேட்பாளர்களில் 391 பேர் தங்களது வேட்புமனுவில், தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதில் முந்துவது பாரதிய ஜனதா கட்சி தான். அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட 224 வேட்பாளர்களில் 83 பேர் (37%) தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள 220 வேட்பாளர்களில் 59 பேர் (27%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளர்களில் 21 சதவிகிதம் பேர் மீதும், ஒன்றுபட்ட ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களில் 20 சதவிகிதம் பேர் மீதும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் 19 சதவிகிதம் பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. சுயேச்சை வேட்பாளர்களில் 10 சதவிகிதம் பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.

Comments
Post a Comment