Skip to main content

தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டுவிட்டது - நீதிபதி கிருபாகரன்

தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டுவிட்டது -அமைச்சர் முன்னிலையில் நீதிபதி கிருபாகரன் பரபரப்பு பேச்சு

தி.மலை: தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டுவிட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 1,56,170 பேர், கடந்த மாதம் 19ம் தேதி 474 மையங்களில் ஒரே நேரத்தில் தமிழ் வாசித்து உலக சாதனை நிகழ்த்தினர். அரசு பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய உலக சாதனைக்கான அங்கீகார சான்றுகள் ஐகோர்ட் நீதிபதி மற்றும் கல்வி அமைச்சரிடம் வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் பேசிய நீதிபதி கிருபாகரன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசுப்பள்ளிகளில் கற்பித்தலில் குறைபாடு உள்ளது என்றார். மேலும் மாணவர்களிடம் பேசிய அவர் தவறு செய்வதை தாங்கி பிடிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் அது செய்யும் தொழிலுக்கு துரோகம் என்றும் கூறினார்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது