தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டுவிட்டது -அமைச்சர் முன்னிலையில் நீதிபதி கிருபாகரன் பரபரப்பு பேச்சு
தி.மலை: தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டுவிட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 1,56,170 பேர், கடந்த மாதம் 19ம் தேதி 474 மையங்களில் ஒரே நேரத்தில் தமிழ் வாசித்து உலக சாதனை நிகழ்த்தினர். அரசு பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய உலக சாதனைக்கான அங்கீகார சான்றுகள் ஐகோர்ட் நீதிபதி மற்றும் கல்வி அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பேசிய நீதிபதி கிருபாகரன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசுப்பள்ளிகளில் கற்பித்தலில் குறைபாடு உள்ளது என்றார். மேலும் மாணவர்களிடம் பேசிய அவர் தவறு செய்வதை தாங்கி பிடிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் அது செய்யும் தொழிலுக்கு துரோகம் என்றும் கூறினார்.
Comments
Post a Comment