Skip to main content

நாளிதழ் கிரைம் நிருபர்கள் மெளனம் ஏன்?

சென்னை பெரு நகர காவல்துறையின் கஞ்சா விற்பனை செய்த பட்டினபாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் முத்துகிருஷ்ணன், கைது செய்யபடவில்லை. ஆனால் முத்துகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார்.. இந்த செய்தி தொடர்ச்சியை நாளிதழில்களில் இரண்டு நாட்களாக இடம் பெறவில்லை...
3ம் தேதி கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் அருகில் இருக்கும் நெஞ்சாலைத்துறை கட்டிடத்தில் இருந்த விலை உயர்ந்த கணனிகள், பிரிண்டர், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பல பொருட்கள் திருட்டு போய்விட்டது... ஆனால் பல லட்சம் மதிப்புள்ள கணனி திருட்டு போனதற்கு ரூ2.50 - ரூ3 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
இது தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் ஏன் வரவில்லை..
நாளிதழ் கிரைம் நிருபர்கள் மெளனம் ஏன்....?? திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை எது நடந்தாலும் செய்தி வராது... வாழ்க...பத்திரிகை ஜனநாயகம்...

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது