Skip to main content

திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் ஆதரவற்ற சிறுவர்களுக்கு இலவசக் கல்வி ..

திருச்சி அருகே, காவிரிக்கரையில், திருப்பராய்த்துறையில், 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற சிறுவர்களுக்கான ஒரு இல்லம் நடத்தப்பட்டு வருகிறது.


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இல்லத்தில், இரண்டு பள்ளிகளும், ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் (ITI ) நடத்தப்பட்டு வருகிறது…
திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் ஆதரவற்ற சிறுவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுவது குறித்து குடிலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த ஆசிரமத்தில் ஓர் துவக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆசிரியர்கள் தங்க குடியிருப்புகள் உள்ளன. இங்கு 10- ஆம் வகுப்புத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி உள்ளது. இந்த மாணவர்கள் அரசு ஐ.டி.ஐ.யில் சேர்ந்து தொழிற்பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இங்கு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் மற்றும் இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

அத்துடன் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்பில் சேர்த்து பொறியாளர்களாகவும் ஆக்கப்படுகின்றனர். மேலும், நடப்பாண்டு முதல் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியைத் தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஓவியம், நாடகம், யோகா, கணினி பயிற்சி ஆகிய கலைகளில் திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 8 ஆண்டுகளுக்கு முன் தாய், தந்தை இருவருமே இல்லாத சிறுவர்கள் மட்டுமே இங்கு சேர்க்கப்பட்டு வந்தனர். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தாயோ அல்லது தந்தையோ ஒருவர் மட்டும் இருந்து படிக்க வைக்க இயலாத  ஆண்  குழந்தைகளும் சேர்க்கப்படுகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இங்கு சேர விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ஸ்ரீராமகிருஷ்ண குடில், திருப்பராய்த்துறை-639115. திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொலைபேசி: 0431- 2614235, 0431- 2614548 மற்றும் செல்லிடப் பேசி 9442352770 ஆகியவற்றில் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிலின் பள்ளிகளில் சேர்க்கப்படும் சிறுவர்களுக்கு, குடிலில் இருந்து ரூபாய் ஆயிரம் டெபாசிட் அவர்களுடைய எதிர்கால நலனுக்காக செய்து வைக்கப்படுகிறது. அவர்கள் படிப்பு முடிந்து குடிலை விட்டு வெளியே சொல்லும்போது, டெபாசிட்டின் கூடுதல் தொகையையும் சேர்த்து அன்பளிப்பாக வழங்கி அனுப்பி வைக்கப்படுவார்கள்

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

                  2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேற்கண்ட 3 தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேலும் சிலரும் மேல்முறையீட்டு மனுக் கள் தாக்கல் செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை அப்போதைய தலைமை நீதிப...